போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் சடலம்
வயல் ஒன்றில் இருந்து மர்மமான முறையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரஜனபத பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பின்னால் இருந்து நேற்று (02) இச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் தெரிய வந்தவை
வல்ஹிங்குருகெட்டிய உரகஸ்மன்ஹ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வீழ்ந்த இடத்திற்கு அருகாமையில் சட்டவிரோத மின் வேலி ஒன்று காணப்படுவதாகவும் மின் வேலியில் மோதி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.