போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த குழந்தை!
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய தினம் (02-12-2022) காலை குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம பகுதியில் இருந்தே இந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
பொல்பித்திகமவில் இருந்து ஹிரிபிட்டிய வீதிக்கு செல்லும் வீதியின் ஓரத்தில் உள்ள பூகொல்லாகம வெலயா என்ற இடத்தில் குழந்தையொன்று அழும் சத்தம் கேட்டதனை அவ்வழியாக சென்ற ஒருவர் கேட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று சிசுவை மீட்டு பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.