போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்
தியகல பகுதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று ( 28-03-2023) பிற்பகல் 3.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பிரதிப் குமார அஸ்விஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த ´கள்´ லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்து நடைபெறும்போது வட்டவளை பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியுள்ளது.
எனவே, மோட்டார் சைக்களில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.