போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கந்தக்காடு கைதிகள் தப்பிச்சென்ற சம்பவத்தை ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!
பொலனறுவை – வெலிகந்த கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய, ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழுவினருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதிகளில், மீண்டும் கைதான 129 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இவர்களிடம் பெறப்பட்ட தகவலின் பிரகாரம் ஒன்பது பேரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.