போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு வேலாயுதம் கந்தப்பு
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வதிவிடமாகவும், நாவலப்பிட்டி, வெள்ளவத்தை, கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு வேலாயுதம் அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினர்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,புஸ்பராணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,சிமித்திரா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,ரவீந்திரகுமார், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ரேக்காவைஷ்ணவி, ரிசாந் அக்ஷரன், சாயிவர்ஷினி, சாய்வரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை, பொன்னம்மா ஆகியோரின் சகோதரனும்,ஜெகசோதி பவளம், சறோ, ராதா யசோ, காலஞ்சென்றவர்களான ராணி, தர்மம், பாபு, ரஞ்சன் ஆகியோரின் மைத்துனரும்,ரவிராஜ்(நோர்வே), வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகராஜ் ஆகியோரின் பெரியப்பாவும்,பெறாமக்களின் பெரியப்பாவும் மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.