போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஏ9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து: 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (18-10-2023) இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஏ9 வீதியின் 105 மற்றும் 106 ஆவது கிலோமீற்றருக்கு இடையில் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த பயணிகள் மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்தவர்களில் இரு பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளுக்காக பேருந்தின் சாரதி மரதன்கடவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.