போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் மேலும் 10 இலட்சம் முட்டைகள் இறக்குமதி!
இந்தியாவிலிருந்து மேலும் 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 8 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுடன் முட்டைகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அதற்கான மாதிரிகளை எடுக்க இருப்பதாகவும் குறித்த அதிகாரி கூறினார்.