போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு தங்கமணி தனபாலன்
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கைதடியை வசிப்பிடமாகவும், வவுனியா சிதம்பரபுரம் சிதம்பரநகரை வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி தனபாலன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தங்கமணி(ஆசிரியர்), சின்னமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மயில்வாகனம்(பொருளியலாளர்), தையல்நாயகி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,தமயந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான துஷியந்தி, செவ்வந்தி மற்றும் ஆனந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சதீஸ்குமார்(Babu), சிவறஞ்சன்(Ranjan) ஆகியோரின் அன்பு மாமனாரும்,டிலன்(Dylan), டமியன்(Damien), அனைஸ்(Anais), அபிஷன்(Abisan) ஆகியோரின் பாசமிகு பேரனும்,மனோகரி, காலஞ்சென்ற மனோராஜ், மனோராணி, மனோரஞ்சனா, மனோரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.உடன்பிறவாச் சகோதர சகோதரிகளின் அன்புச் சகோதரரும்,பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும், சித்தப்பாவும், மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.