போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நேருக்கு நேர் மோதிய இரண்டு பேரூந்துகள்: 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்
கினிகத்தேன – பெரகஹமுல பகுதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (16-02-2023) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இதன்போது பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பேரூந்து ஒன்றும் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மற்றுமொரு இ.போ.ச பேருந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.
இதன்போது எதிர் திசையில் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இச் சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.