போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி மேரி அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம்
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புபிள்ளை ரோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானபிரகாசம் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி ஆன் கசில்டா(பாப்பா,சுவீடன்), அலோசியஸ்(குலசிங்கம், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்டோரியா(இலங்கை), செலஸ்ரின்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான மரியம்மா, சந்தியாப்பிள்ளை, அன்னம்மா, கபிரியேற்பிள்ளை, மற்றில்டா, பற்றிக் இம்மானுவேல், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌஷி அவர்களின் அன்பு மாமியாரும்,
மைக்கல், கேப்பிரியல், டேனியல், சாரா, அக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.