போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மட்டக்களப்பு குசனார்மலைக்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ் தூதுவர்!
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவர் இன்றைய தினம் மாலை (25-01-2023) மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குசனார்மலைக்கு விஜயம் செய்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவர் டொமிங்க் பேர்கிலர் (Dominik Furgler) மட்டக்களப்புக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பில் தொல்லியன் செயலணி ஊடாக தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் (R. Shanakiyan) தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த விஜயத்தினை முன்னெடுத்தார்.
குசனார்மலைக்கு வருதைந்த தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவிஸ் தூதுவருக்கு ஆசியும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குசனார்மலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அப்பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தார்.