போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் பிள்ளைகளின் பசியை போக்க தான் உயிரை தியாகம் செய்த தாய்!
இலங்கையில் கம்பளையில் உள்ள பகுதியொன்றில் பசியின் கொடுமையினால் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சாந்தி குமாரி என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூவர் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள். மேலும் அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருவதும், உயிரிழந்தவருக்கு வேலை இல்லை என்பதும் தெரியவந்தது.
கணவன் சம்பாதிக்கும் வருமானம் குடும்பப் பராமரிப்பிற்குப் போதாததால் பாடசாலை பிள்ளைகளுக்கு உபகரணங்களை வழங்குதல், உணவு வழங்குதல், மருந்து வழங்குதல் போன்ற பணிகளைச் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க பலாப்பழத்தை கண்டுபிடித்த தாய், மதியம் உணவு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டின் அருகே இருந்த பலா மரத்தில் ஒரு பழம் இருப்பதைப் பார்த்து, அதை பறிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
நீளமான தடியில் கத்தியை ஒட்டியிருந்தாலும், பலாப்பழம் அதை விட உயரமாக இருப்பதால் அதை பறிக்க முடியவில்லை. பலா மரத்தின் அருகே இருந்த ஜாதிக்காய் மரத்தில் ஏறி இதனை பறிக்க முயற்சித்துள்ளார்.
எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை பிள்ளைகளை நினைத்து பலாப்பழத்தை பறிக்க மரத்தில் ஏறியுள்ளார்.
இந்த நிலையில் பலத்த சத்தம் கேட்டு பிள்ளைகள் மரத்தின் அருகே வந்து பார்த்தபோது, அவர் மரத்தின் அருகே கிடப்பதைக் கண்டு கிராம மக்களின் உதவியை நாடி கம்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கம்பளை வைத்தியசாலையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்றூ வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.