போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மட்டக்களப்பில் வீட்டை உடைத்து திருட முயற்சித்த திருடனுக்கு ஊர் மக்களால் நேர்ந்த கதி!
மட்டக்களப்பில் உள்ள வீடொன்றை உடைத்து திருட முற்சித்த திருடன் ஒருவனை ஊர் பொது மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலையில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடு உரிமையாளர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.
அதன்பின்னர் திருடனை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்