போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற பயங்கர விபத்து: சாரதிக்கு ஊர்மக்களால் நேர்ந்த கதி
வவுனியா மாவட்டம் – கனகராயன்குளம் பகுதியில் சற்றுமுன்னர் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த பகுதியில் லொறி ஒன்றை வேகமாக செலுத்தி வந்த சாரதி, உறக்க மயக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இரண்டு உழவு இயந்திரங்களில் மோதியுள்ளார்.
பின் அருகிலிருந்த நபர் ஒருவரையும் மோதிய நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்டு வைத்தியசாலை அவசர பிரிவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் கோபமடைந்த ஊர்மக்கள், சாரதியை தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினரால் சாரதியையும் சாரதியுடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.