ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
கடமைகளை பொறுப்பேற்றார் ஆளுநர்

வடமகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வு திங்கட்கிழமை(22) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர், சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்தவாரம் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.