ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திருமதி வசந்தாதேவி கந்தசாமி (வசந்தா டீச்சர்)

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகக் கொண்ட வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றசென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
டயானா, நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேமா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரபாலன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிரவீனா, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
செந்தில், நகுலேஸ்வரன், சுபிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகஸ்தியன், போகநேகன், அம்ரிதா, அமித்தன், ஆதிரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.