போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை; ஜனக ரத்நாயக
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை கோரிக்கை வைக்கவில்லை
அதோடு இப்படியே போனால் காலையில் எழும் போது எரிபொருளின் விலையைப் போல மின்கட்டணமும் அதிகரித்திருக்கும் எனவும் எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார சபை இதுவரை எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை என குறிப்பிட்ட அவர் , தீர்வு வழங்குவதற்கான அந்த முன்மொழிவு வரும் வரை நாங்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களிடம் உள்ள தரவுகளின்படி, மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.