போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
உயிரிழந்த நிலையில் இராட்சத ஆமை
உயிரிழந்த நிலையில் இராட்சத ஆமை புதன்கிழமை(18) காலை கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் ஆமை கரை ஒதுங்கிக்கிடப்பதை அவதானித்துள்ளனர்.
சுமார் 50 கிலோ கிராமுக்கு மேல் நிறை இருக்கும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருடமும் இவ்வாறு கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பல ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.