ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி

கொழும்பு விஸாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரமும் (O/L) உயர்தரமும் (A/L) தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனைப் படைத்துள்ளார்.
2023ஆம் கல்வியாண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய அவர், 8 ஏ மற்றும் 1 பி சித்திகளைப் பெற்றார். இதனையடுத்து, ஆறு மாதங்களுக்குள் 2024ஆம் கல்வியாண்டிற்கான உயர்தரப் பரீட்சையிலும் தோற்றி, 3 ஏ சித்திகளைப் பெற்று சிறப்பு சாதனையை பதிவு செய்துள்ளார்.
சாதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பாடசாலை பரீட்சார்த்தியாக உயர்தர பரீட்சையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ரனுலி தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சையில் தோற்றியுள்ளார்.
இவற்றுடன், 20 வருட அனுபவம் கொண்ட ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்களை விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு அதிகமாக தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.