உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக தெரிவு!

2024ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்ததின்படி, பெண் பரீட்சார்த்திகள் ஆண் பரீட்சார்த்திகளை விட அதிக அளவில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சை எழுதிய பரீட்சார்த்திகளில் மொத்தமாக 64.73% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.பெண் பரீட்சார்த்திகளில் 71.93% பேர் தகுதி பெற்றுள்ள நிலையில்,ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
இதனுடன், மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த பரீட்சார்த்திகள் மொத்தம் 29,244 பேர்.ஆண்களில் 13.87% பேர், பெண்களில் 8.6% பேர் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
மேலும், 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறப்பு சம்பவமாக, ரக்வனா தேமுவாவட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற கவிந்தி கீதாஞ்சலி, கலைப் பிரிவில் ஐந்தாவது இடத்தைப் பெற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளார்.