போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இன்றைய விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களும் இன்று இடம் பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.