போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பில் அமெரிக்க அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்
அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்கப் பெண்மணியான அந்த அதிகாரி குருந்துவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசிக்கிறார்.
விருந்துக்கு சென்ற அதிகாரி
நேற்று மாலை அருகில் உள்ள இடத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் அவரது கைப்பை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பையில் இருந்த விலைமதிப்பற்ற பொருட்கள், கையடக்க தொலைபேசி, கடன் அட்டை என்பன அதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது கைப்பை திருடப்பட்டதும், அவர் பயந்து வீட்டிற்கு ஓடி விட்டதாகவும் பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்து.
பொலிஸார் நடவடிக்கை
அந்த அறிவித்தலையடுத்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், குருதுவந்த்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் பொலிஸ் மா அதிபர்கள் பலர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பியோடிய இருவர் மோட்டார் சைக்கிளை தற்போது அடையாளம் கண்டுள்ளனர். இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.