போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தென்கொரியாவில் இலங்கை நபருக்கு நேர்ந்த நிலை!
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நேற்று இடம்பெற்ற ஹாலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் வெளிவிவகார அமைச்சர் திரு.அலி சப்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சுமார் 19 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் ஈரான், நோர்வே, சீனா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.