போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி நடேசன் தெய்வானைப்பிள்ளை
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முகுந்தன்(ஜேர்மனி), திருவேணி(ஆசிரியை- யா/மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரி), ரவீந்திரன்(நோர்வே), கௌரிவேணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரப்பிள்ளை, குணவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, நாகம்மா, செல்லம்மா, சிவகுமார் ஆகியோரின் சகோதரியும்,
சுபாகரன், திலகவதி(ஜேர்மனி), கலைரூபி(நோர்வே), குணராசா(ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும்,
ரஜுபன் ராகீசன், ரட்சிகா(ஜேர்மனி), திவானுஜன், சுபானிஜன், கம்சியா(இலங்கை), துபிசன், விதுசன், வர்ணிகா(நோர்வே), ஆதிஸ்யன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.