போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி அவர்கள் 08-08- 2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
பாலசுப்பிரமணியம் (மகோக்கடை பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காயத்திரி, ஆரணியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயலெட்சுமி(பிரித்தானியா), அருந்தவநேசன்(ஜேர்மனி), பிறேமகுமாரி (இலங்கை), பிறேமரஞ்சினி(பிரான்ஸ்), தயாபரநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம்(சுவிஸ்), பவானிதேவி(இந்தியா), சந்திரபாலன்(சுவிஸ்), பிரசன்னா(நேசன்- சுவிஸ்), ஞானசீலன்(பிரான்ஸ், சபாரட்ணம்(பிரித்தானியா), விஜயலட்சுமி(ஜேர்மனி), சந்திரா(ஓய்வுபெற்ற கிராம சேவகர், இலங்கை), மோகனகாந்தன்(பிரான்ஸ்), பொற்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
சற்குணேஸ்வரி(சுவிஸ்), உலகநாதன்(இலங்கை), பரமேஸ்வரி(குஞ்சு- இலங்கை), உதயராணி(சுவிஸ்), அனுசியா(பிரான்ஸ்) ஆகியோரின் சகலியும், நிரூபன், சுரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நித்தியா,மித்திரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.