போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு செல்லத்துரை பரமேஸ்வரன் (கண்ணன்)
யாழ். கோப்பாய் தெற்கு பழையவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாக்கியநாதன், பத்மறஞ்சி, பத்மாவதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன், செல்வராணி, விஜயலட்சுமி, மகாலிங்கம், காலஞ்சென்ற தவராஜா, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிதரன், பகிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஜா, ராஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலவன், காவியா, ரெஷிறா, ரெஷான் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.