போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு நாகமுத்து இராசலிங்கம்
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராசலிங்கம் அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னபூரணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(முன்னாள் வருமான வரித் திணைக்கள வரி மதிப்பாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,
அகல்யா, சஞ்சயன், கௌசல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன், காருண்யா, ரவிதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சோமலிங்கம், தட்சணாமூர்த்தி மற்றும் திலகவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலாவதி(வவுனியா), சிவஞானேஸ்வரி(கோப்பாய்), காலஞ்சென்ற பரநிருபசிங்கம் மற்றும் சரோஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவத்திராதேவி மற்றும் கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகரத்தினம்(முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி உப அதிபர்), காலஞ்சென்ற பஞ்சரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நேத்ரா, நீரஜா, தர்வின், கனிஸ்கா, மதுஷன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.