போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஹெலோவீன் திருவிழா: உயிரிழந்த இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான சோக தகவல்
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் திருவிழாவின் போது இடம்பெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கண்டி, உடத்தலவின்ன, மடிகே பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான சோக செய்தி
தென் கொரியாவில் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் தென் கொரியாவுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள்