போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கனுமா அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
நமக்கு லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் நாம் வாழும் இல்லத்திலும் லட்சுமியின் பரிபூரண அருள் இருக்க வேண்டும்.
அவ்வாறு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும் என்றால் வீட்டில் என்றென்றைக்கும் நேர்மறையான ஆற்றல்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதற்கும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும் பல பரிகாரங்களை நாம் மேற்கொள்வோம்.
நாமும் நம்முடைய எண்ணங்களில் நேர் மறையாகவும், நாம் பேசும் வார்த்தைகளில் கூட எதிர்மறை சொற்களை தவிர்த்து நேர்மறையான சொற்களை உபயோகித்தாலும் நமக்கு நல்ல பலன் கிட்டும்.
இருப்பினும் அதையும் மீறி சில நேரங்களில் எதிர்மறை ஆற்றல்களாக விளங்கக்கூடிய தீய சக்திகளும், தோஷங்களும், சாபங்களும் நம் வீட்டில் அதிகமாக இருக்கும் பொழுது நாம் அதற்குரிய பரிகாரங்களை முறையாக செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்வதால் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகளும், தோஷங்களும், சாபங்களும் விலகி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது அனுபவபூர்வமாக கண்ட உண்மை.
பஞ்சகவ்யம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது பஞ்சகவ்ய விளக்கு. இந்த விளக்கில் நாம் தீபம் ஏற்றும் பொழுது நமக்கு மகாலட்சுமியின் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பஞ்சகவியத்தை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நாம் எண்ணில் அடங்காத பலன்களை பெற முடியும்.
பஞ்சகவ்யம் என்றால் பசுவின் மூலம் வரக்கூடிய ஐந்து வகை பொருட்களை சேர்ப்பது தான். பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் இவை ஐந்தையும் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை தான் நாம் பஞ்ச கவ்வியம் என்று கூறுகிறோம்.
பொதுவாக பசுவை நாம் அனைத்து தெய்வங்களின் ஸ்வருவமாக காண்கிறோம். இன்றளவும் ஆலயங்களிலும், இல்லங்களிலும் நாம் கோபூஜை செய்வதை மேற்கொண்டு வருகிறோம்.
வாரத்தில் ஒரு முறையாவது வீட்டை சுத்தம் செய்யும் பழக்கம் நம் அனைவரிடமும் இருக்கிறது. பொதுவாக பலரும் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்யும் வழக்கத்தில் இருப்பார்கள்.
அப்பொழுதுதான் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வீட்டில் பூஜை செய்ய முடியும் என்று. அவ்வாறு வீட்டை சுத்தம் செய்த பிறகு செவ்வாய்க்கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோ இந்த பஞ்சகவ்யத்தை கரைத்து வீட்டின் உள்பகுதியில் இருந்து வெளிவாசல் வரை நன்றாக தெளிக்க வேண்டும்.
பிறகு சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். வீட்டிற்குள் இருந்து நாம் இந்த பஞ்சகவ்யத்தை தெளித்து வருவதால் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து தீய சக்திகளையும் நாம் வெளியில் கொண்டு வந்து விரட்டி விடுகிறோம் என்று கருதப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு விலகிய பின் தூபம் போடுவதால் மகாலட்சுமி தாயார் வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள்.