போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுதாம்
நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் சூரிய பகவானின் மகனாவார். ஜோதிடத்தில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம்.
சனி ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் ராசி மாற்றத்தில் ஏற்படும் தாக்கமானது மனித வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார்.
கும்ப ராசியானது சனி பகவானின் மூலதிரிகோண ராசியாகும். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நுழைந்துள்ள சனி பகவான் ஜூன் மாதத்தில் வக்ரமானார். இந்நிலையில் நவம்பர் 04 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கவுள்ளது.
சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கப் போகிறது. இப்போது சனி பகவானின் அருளால் அதிஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இதனால் நவம்பர் 04 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.
குறிப்பாக 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பல வெற்றிகளை காண்பீர்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலகட்டத்தில் நிறைவேறும்.
குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
முக்கியமாக இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
அதோடு சச ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.
எனவே இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.