போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது!
யாழ்ப்பாண கடலில், சட்டவிரோதமான தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தமை மற்றும் கடலட்டைகள் பிடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இன்றையதினம் (06-12-2022) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குருநகர் மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் நீரியல் வள திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.