போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கு தென்கிழக்கே புதிய தாழமுக்கம் உருவாகியுள்ளது !
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாக்கிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (21-12-2022) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன்றைய தினம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் இன்னும் சிறிது நேரத்தில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை எதிர்வரும் 26.12.2022 வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.