போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளரும் கைது!
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய ஈ. குஷான் என்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (29) அதிகாலை 3.57 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் பாலியல் துன்புறுத்தல்
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை திரும்ப கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.
சுற்றுலா விசாவில் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நபர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கைதாகியுள்ளார்.