போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையை வந்தடையுள்ள மற்றொரு கப்பல்!
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு இந்த பருவத்துக்குத் தேவையான 38 நிலக்கரி ஏற்றுமதிகளில் முதலாவது ஏற்றுமதியை சுமந்து வந்த கப்பல் நேற்று (25-10-2022) இரவு கொழும்பை வந்தடைந்தடைந்தாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை (31-10-2022) நாட்டை வந்தடையும் என்று தெரிவித்துள்ளார்.
குறித்த மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலக்கரி கம்பனி அதிகாரிகளுடன், இன்று (26-10-2022) காலை முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்த குறித்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் இன்று (26-10-2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.