போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை குரங்குகள் இதற்காகதான் சீனாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றதா? அமைச்சு தகவல்
இலங்கை குரங்குகள் இனப்பெருக்க நோக்கத்திற்காகவே சீனாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Animal Breeding Limited என்ற சீன நிறுவனம் 100,000 குரங்குகளை கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளது.
குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத் துறையினர், மதத் தலைவர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
“ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான மற்றும் சிறந்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் அதே வேளையில், குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும்போது சிறந்த முடிவை எடுக்க முடியும் என அமைச்சகம் நம்புகிறது.
குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் அழிக்கப்படும் பிரதேசங்களில் இருந்து குரங்குகளை அகற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும், காடுகள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து குரங்குகளை அகற்றும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.