போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை ஜனாதிபதி ரணிலிடம் உறுதியளித்த சீன தூதுவர்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹொங்க்கும் (Qi Zhenhong) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இன்றைய தினம் (25-11-2022) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன தூதுவர் ரணிலிடம் உறுதியளித்தார்.
மேலும், சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை கண்டிப்பதாகவும் சீன தூதுவர் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.