போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை!
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை அதிகூடிய பாடசாலை மாணவர்கள் நேற்றையதினம் (01-12-2022) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற கண்காணிப்பாளர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 32 பாடசாலைகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த நாடாளுமன்றத்தின் பொதுக்கூடம் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக திறக்கப்பட்டது.
இதனையடுத்து, அண்மைக் காலமாக 25,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்றுகூடி நாடாளுமன்ற விவாதங்களை பார்வையிட்டுள்ளதாக நாடாளுமன்ற கண்காணிப்பாளர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.