போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை பொலிஸில் இணைந்த கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கட் வீரர்கள் நால்வர் இணைந்துள்ளனர்.
இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவும், அஷேன் பண்டார மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் பொலிஸ் பரிசோதகர்களாகவும் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் முடிவடைந்த இலங்கை கிரிக்கெட் முதற்தர போட்டியில் கூட்டு சாம்பியன் அந்தஸ்தை பெற்ற இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணியை வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னிலையில், இலங்கை பொலிஸில் இணைந்துகொண்ட நான்கு கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளனர்.