போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஈழத்துச் சீர்காழி சங்கீத பூசணம் குமாரசாமி காலமானார்!
“பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது..” என்ற தாயக பாடல் உட்பட பல தாயக பாடல்களை பாடிய செ.குமாரசாமி (வரதன்) தனது 73வது வயதில் காலமாகியுள்ளார்.
யாழ்.உடுப்பிட்டியில் வாழ்ந்து வந்த செ.குமாரசாமி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசை துறை பட்டதாரி ஆவார்.
சிறுநீரகப் பாதிப்புக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றிக் காலமானார்.
பன்முக ஆளுமை கொண்ட இவர் ஈழத்துக்கென்றே தனித்துவமான பக்திப் பாடல் மரபை உருவாக்கியதுடன் ஏராளமான நாட்டிய நாடகங்களுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார்.
அத்துடன் சிறந்த ஓவியராகவும் விளங்கியவர். “பூத்த கொடி பூக்கள் இன்றித் தவிக்கின்றது” என்று ஆரம்பமாகும் என அவர் பாடிய பாடல் ஈழத்தமிழ் மக்கள் நெஞ்சங்களில் அழியாத இடம் பிடித்த பாடலாகும்.
மேலும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இசைத் துறை விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் சேவையாற்றினார். இந்நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.