போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில் பிரதான வீதியின் வேரவில் வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு 7:30 மணியளவில் இவ் விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அந் நபர் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஜெயாபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பூநகரி வலைப்பாட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிதம்பரநாதன் வர்மகுமார் (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.