போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கிழக்குப் பல்கலைக்கழகம் மக்களின் பார்வைக்கு
இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது வருடத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரம், பல்கலைக்கழக சபா மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இப்பல்கலைக்கழக வாரத்தை விசேடமாகக் கொண்டாடும் நோக்கில் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக பிராந்தியத்திலுள்ள சமூகத்தினருக்காக எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையினை திறந்த நாளாக நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.