போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சனத் நிஷாந்தவின் மரணம்: சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்கள்! அமைச்சர் அதிரடி நடவடிக்கை
சமூக வலைத்தளங்களில் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பில் இதுபோன்ற கருத்துகளை ஏற்க முடியாது என்றார்.
“அவரது மரணம் தொடர்பில் சமூக வலைதளங்களில் மிக மோசமான பதிவுகள் வந்துள்ளன. யார் யார் இவ்வாறான கருத்துக்களை பதிவிடுகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
இந்த முறை விசாரித்தபோது ஒரு கட்சியை சார்ந்தவர்கள் தான் இந்த விடயங்களை பதிவிட்டுள்ளனர்.
இல்லையேல், ஒருவர் இறந்தால் வேறு யாராலும் இப்படியெல்லாம் சொல்ல முடியாது.
நாம் இதுபற்றி தேடினோம், ஒரு கட்சியில் இணைந்துள்ளவர்களே போலியான கணக்குகளை வைத்து இவ்வாறு கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
முன்பு என்றால் இவற்றை கண்டுபிடிக்க முடியாது இப்போது நாம் சந்தோஷப்படுகிறோம் ஏனென்றால் இப்போது எம்மால் இவற்றை கண்டுபிடிக்க முடியும்.