போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தாயார் வெளிநாட்டில்; சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 20 வருட கடூழியச் சிறை!
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
அதோடு , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து இலட்சம் ரூபா நட்டஈடும் இருபத்தைந்தாயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறும் பலப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரொருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் சிறுமி தனது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தையின் நண்பரான அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவர் கடந்த 2011 ஆண்டு தந்தை வீட்டில் இல்லாத போது சிறுமியைப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் சுமார் 13 வருட கால விசாரணையின் பின் பலப்பிட்டிய நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.