போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பிலியந்தலையில் 17 வயது பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்!
பிலியந்தலை பிரதேசத்தில் காருக்குள் சிக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிலியந்தலை ஜயா மாவத்தையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குறித்த சிறுவன் தன்னைப் பூட்டிக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகனத்தின் கதவுகளைத் திறக்க முடியாமல் சிறுவன் காருக்குளே மாட்டிக்கொண்டுள்ளான்.
பின்னர் அவரது தந்தை வீட்டிற்கு வந்து காருக்குள் இருந்து அவரை மீட்டெடுத்தபோது சிறுவன் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்த நிலையில் , பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.