போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மனைவி உயிரிழப்பு; கணவர் தலைமறைவு
வாரியபொல – தம்பேலியத்த, பம்முனாகொடுவ பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இக்கொலை சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயது பெண் உயிரிழப்பு
சம்பவத்தில் தம்பேலியத்த, பம்முனாகொடுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொலையை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் இன்று (21) நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், வாரிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.