போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மயக்க மருந்தால் உயிரிழந்த இரு வயது குழந்தை
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்தினால் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்தக் குழந்தை கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகு குழந்தை உயிரிழந்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் மயக்க மருந்துக்காக வழங்கப்பட்ட மருந்தினால் உயிரிழந்துள்ளனர்.
பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் மற்றுமொரு பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென அரச மருந்துவர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.