போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார இறுதி நாள் நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் (18-05-2023) நினைவு கூறப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அஞ்சலி நிகழ்வு மாணவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.