போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் பெண் ஊழியரின் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கொள்ளையடித்த கும்பல்!
யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகஸ்த்தரிடம் கத்தி முனையில் வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (13-10-2022) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண் வியாழக்கிழமை மாலை பிரதேச செயலக பணி முடித்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, வீதியில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள், குறித்த பெண்ணை மறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகையையும் கைப்பையையும் அபகரித்து சென்றுள்ளனர்.
கைப்பையினுள் ஒரு தொகை பணம், ஆவணங்கள் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.