போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்ப்பாணத்துக்கு சேவையை வழங்க முன்வந்துள்ள Indigo Airlines
இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவைகளை வழங்குவதற்கு மற்றுமொரு இந்திய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கும் Indigo Airlines (Indigo Airlines) என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் புதிய விமான சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியுள்ளது.
இலங்கை அரசு அனுமதி அளித்தவுடன் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பல ஆய்வு மற்றும் பைலட் விமானங்களை நடத்த Indigo Airlines நிறுவனம் நம்புகிறது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விமான சேவையின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்து அதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தற்போது யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான சேவைகளை Alliance Air வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.