போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்.மாநகர சபை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி!
யாழ்ப்பாண மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. மேலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 2 வது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் (V.Manivananan) பதவியை இராஜினாமா செய்தார்.
யாழ்.மாநகர சபை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி! | Jaffna Municipal Council Chief Minister Gazette
இதனையடுத்து, யாழில் குழப்பமாக சூழல் நிலவி வருகின்றது. உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார்.
யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் இன்றைய தினம் (06-01-2023) வெளியாகியுள்ளது.